என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்
Byமாலை மலர்12 Feb 2022 1:24 PM GMT (Updated: 12 Feb 2022 1:24 PM GMT)
நகர்ப்பற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் வருகிற 19&ந் தேதி நடைபெற உள்ளது. இதில் 1702 பேர் வேட்பாளர்களாக போட்டி யிடுகின்றனர். அவர்களுக்கான சின்னங்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக 1615 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே அந்தந்த பகுதிகளுக்கு 1940 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், 1702 வேட்பாளர்களுக்கான சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
இதனை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X