என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுமியை திருமணம் செய்ததாக என்ஜினீயர் மீது புகார்
Byமாலை மலர்12 Feb 2022 1:13 PM GMT (Updated: 12 Feb 2022 1:13 PM GMT)
சிறுமியை திருமணம் செய்ததாக என்ஜினீயர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடந்தது. இதில் மணப்பெண்ணுக்கு 17 வயது என்ற தகவல் திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி யோகம்மாளுக்கு கிடைத்தது.
இதுதொடர்பாக அவர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஹேமமாலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சிறுமியை திருமணம் செய் தது திருப்பரங்குன்றம் கள்ளர் தெருவை சேர்ந்த பிரசாந்த் (வயது 27) என்பது தெரியவந்தது. என்ஜினீயரான அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இதுதொடர்பாக பிரசாந்த், அவரது தந்தை குருசாமி, தாய் பாப்பா, திருப்பரங்குன்றம் ராமானுஜர் நகர் செல்லப்பாண்டி மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகிய 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X