என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    நாகரசம்பட்டியில் வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டியில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக சுவாமிக்கு ஸ்ரீ விநாயகர் வழிபாடு, புன்யாக வாசனம், ஸ்ரீ மஹா கணபதி, மஹாலட்சுமி, அதித்யாதி, நவகிரக ஹோமங்கள் செய்து தீர்த்தக் குடம், முளை பாரிகை ஊர்வலம் நடைபெற்றது. 

    அதனை தொடர்ந்து வெள்ளி கிழமை அதிகாலை பூர்வாங்க பூஜைகள் இரண்டாம் காலம் யாகம், ஸ்பர்ஸாஹீதி, நாடி சந்தனம், மூல மந்திரம், மாலா மந்தர ஹோமம், உள்ளிட்ட சிறப் பூஜைகளுடன் புரோகிதர் களால் சுவாமியின் கோபுர கலசத்திற்கு புனித நீரூற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அத்துடன் சுவாமியை அலங்கரித்தும் தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வரசித்தி விநாயக பெருமான் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். 

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் செட்டியார்கள், ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இவ்விழாவிற்கு சுற்று வட்ட பகுதிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழானை தொடர்ந்து சுவாமிக்கு 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும் என்று விழாவில் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×