என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    பட்டப்பகலில் கண்ணில் மிளகாய் பொடி தூவி காங். பிரமுகர் மனைவியிடம் நகை பறித்த மர்ம நபர்

    பட்டப்பகலில் கண்ணில் மிளகாய் பொடியை தூவி காங். பிரமுகர் மனைவியிடம் நகை பறித்த மர்ம நபர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    பட்டப்பகலில் கண்ணில் மிளகாய் பொடியை தூவி காங். பிரமுகர் மனைவியிடம் நகை பறித்த மர்ம நபர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு வைரா பாளையம் நாட்ராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஈ.பி.ரவி (52). ஈரோடு மாநகர் மாவட்ட தலைவராக உள்ளார். இவரது மனைவி புனிதா (47). நேற்று மாலை இவர் ஆர்.கே.வி.சாலையில் உள்ள டெய்லர் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார். 

    அப்போது கருங்கல்பாளையம் திருநகர் காலனி, ஆறுமுக வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் அருகே வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள்  பழுதாகி நின்றது. 

    புனிதா மோட்டார் சைக்கிளை இயக்க முயன்றபோது அங்கு வந்த மர்மநபர்கள் தங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை புனிதா கண்ணில் தூவி, அவரது கையில் அணிந்திருந்த 6 பவுன் தங்க வளையல்களை பறித்துக்கொண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றனர். 

    அப்போது புனிதா திருடன், திருடன் என கத்தினார். அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். 

    மேலும் சம்பவம் நடந்த பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப் படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    Next Story
    ×