என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
    X
    ராஜபாளையத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.

    ராஜபாளையத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு

    உள்ளாட்சி தேர்தலையொட்டி ராஜபாளையத்தில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்கவும், அச்சத்தை போக்கும் வகையிலும், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

    ராஜபாளையத்தில் வருகிற 19&ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், அச்சமின்றி வாக்களிக்கவும் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

    ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் அணிவகுப்பை தொடங்கி வைத்தார். இதில் ராஜபாளையம் காவல்துறை உட்கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்&இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் மற்றும் விருதுநகர் ஆயுதப்படை காவலர்கள் உள்பட 300&க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

    போலீசாரின் கொடி அணிவகுப்பு போலீஸ் பேண்டு வாத்தியம் இசைக்க மதுரை சாலை, பழைய பஸ் நிலையம், காந்திசிலை ரவுண்டானா, காந்தி கலைமன்றம் வழியாக புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது.
    Next Story
    ×