என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெருந்துறையில் வேன் கவிழ்ந்து வாலிபர் பலி

    பெருந்துறையில் வேன் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானர். 2 பேர் படுகாயமடைந்தனர்
    பெருந்துறை:

    பெருந்துறையில் வேன் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானர். 2 பேர் படுகாயமடைந்தனர்

    ஈரோடு நாராயண வலசு பகுதியை சேர்ந்தவர் லிங் கேஸ்வரன் (48). இவர்  தனது  ஆம்னி வேனில் அவரது நண்பர்கள் சோமசுந்தரம் (30) மற்றும் ஈரோடு நாராயணசாமி வீதியை சேர்ந்த சக்திவேல் (40) ஆகி யோருடன்  ஈரோட்டில் இருந்து பெருந்துறைக்கு சென்றனர்.

    லிங்கேஸ்வரனை பெருந்துறை புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு சோமசுந்தரம், சக்திவேல் ஆகியோர் பணிக்கம் பாளையத்துக்கு சென்று விட்டனர். மீண்டும் பெருந்துறை வந்து அவர்கள் லிங்கேஸ்வரனுடன் ஆம்னி வேனில் ஈரோடு சென்றார்.

    அவர்கள்  மேட்டுக்கடை அருகே உள்ள ரிங் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது வேனை திருப்பிய போது நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. 

    இதில் சக்திவேல் மற்றும் சோமசுந்தரம், லிங்கேஸ்வரன் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக் கத்தினர் அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து   லிங்கேஸ்வரன் மற்றும் சக்திவேல் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இன்று பரிதாபமாக  இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    Next Story
    ×