என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமணம்
கடலூர் அருகே திருவந்திபுரம் கோவில் சாலையில் நடந்த 90 திருமணங்கள்
கடலூர் அருகே திருவந்திபுரம் கோவில் சாலையில் ஒரு திருமணம் நடந்த பிறகு மற்றொரு திருமணம் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து திருமணம் நடைபெற வேண்டும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. இதையொட்டி வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.
அதோடு திருணமண விழாக்களில் 50 பேர் மட்டும் கலந்து கொண்டு திருமணம் நடைபெறலாம் என தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளனர்.
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் பிரசித்திப்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இதற்காகவே கோவில் பகுதியில் உள்ள சாலைகளில் ஏராளமான திருமண மண்டபங்கள் உள்ளது.
இன்று முகூர்த்த நாள் என்பதால் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் பின்புறம் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் அதிகாலை முதல் நடைபெற்று வந்தன. மேலும் திருவந்திபுரம் சுற்றியுள்ள தனியார் திருமண மண்டபங்களில் 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
இதையொட்டி இன்று காலை முதல் மணமக்கள் ஜோடியாக கோவில் முன்பு தங்கள் உறவினர்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் சாலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் முகக் கவசம் அணியாமலும் திருமணத்தில் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் நடைபெறும் திருமணத்தின் போது அவர்கள் உறவினர்கள் பெற்றோர்கள் என 10 பேர் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஒரு திருமணம் நடந்த பிறகு மற்றொரு திருமணம் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து திருமணம் நடைபெற வேண்டும் என எச்சரிக்கை செய்தனர். இதன் காரணமாக திருவந்திபுரம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story






