என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஓசூரில் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

    உள்ளாட்சி தேர்தலையொட்டி ஓசூரில் போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஓசூர்:

    தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

    இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. 

    அந்தவகையில்,  ஓசூரில் நடைபெறும் மாநகராட்சி தேர்தலையொட்டி நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. 

    ஓசூர் தாலுகா அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை  ஏ.டி.எஸ்.பி. ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    இந்த அணிவகுப்பு, ஓசூர் நகரின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வாக்குப்பதிவின்போது பொதுமக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் வகையிலும், பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் உள்ளனர் என்பதை தெரிவிக்கும் வகையிலும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

    இதில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×