என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்கு பதிவு
பிளஸ்-2 மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு- போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு
பாலியல் பலாத்கார புகார் கூறப்பட்ட சங்கிலி கருப்பசாமி மீது சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்தது. கடந்த 21-ந்தேதி வலி அதிகமானதால் அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி மாணவியிடம் விசாரித்தனர். முதலில் சரியாக பதில் கூறாத அவர் பின்னர் தனது நிலையை கூறினார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவி 10-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கு செல்லும் வழியில் சங்கிலி கருப்பசாமி என்ற வாலிபர் பழக்கமாகி உள்ளார். பின்னர் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது திருமணம் செய்வதாக சங்கிலி கருப்பசாமி ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் நெருங்கி பழகி உள்ளார். இதில்தான் மாணவி கர்ப்பமாகி உள்ளார்.
இதுகுறித்து சங்கிலி கருப்பசாமி மீது பாலியல் பலாத்கார புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையில் மாணவிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பிரசவத்திற்கான வலி என தெரியவந்தது. அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை எடை குறைவாக இருந்ததால் 108 ஆம்புலன்சு மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்தது. கடந்த 21-ந்தேதி வலி அதிகமானதால் அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி மாணவியிடம் விசாரித்தனர். முதலில் சரியாக பதில் கூறாத அவர் பின்னர் தனது நிலையை கூறினார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவி 10-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கு செல்லும் வழியில் சங்கிலி கருப்பசாமி என்ற வாலிபர் பழக்கமாகி உள்ளார். பின்னர் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது திருமணம் செய்வதாக சங்கிலி கருப்பசாமி ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் நெருங்கி பழகி உள்ளார். இதில்தான் மாணவி கர்ப்பமாகி உள்ளார்.
இதுகுறித்து சங்கிலி கருப்பசாமி மீது பாலியல் பலாத்கார புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையில் மாணவிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பிரசவத்திற்கான வலி என தெரியவந்தது. அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை எடை குறைவாக இருந்ததால் 108 ஆம்புலன்சு மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






