என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாம் தமிழர் கட்சி
விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் - நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம்
மாமல்லபுரம் பேரூராட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்தார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி சார்பில் மாமல்லபுரம் பேரூராட்சியில் 15 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.
1-வது வார்டில் வளர்மதி, 2-வது வார்டில் ராஜேந்திர குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 4-வது வார்டில் செல்வி, 5-வது வார்டில் கேசவன், 6-வது வார்டில் தமிழரசன், 7-வது வார்டில் பிரேமா, 8-வது வார்டில் அமுதா, 9-வது வார்டில் மணிகண்டன், 10-வது வார்டில் ராணி, 11-வது வார்டில் வினோத், 12-வது வார்டில் இந்திரா, 13-வது வார்டில் நர்மதா, 14-வது வார்டில் கோமதி, 15-வார்டில் மொய்தின் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் மாமல்லபுரம் பேரூராட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் இந்த பிரசாரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.
Next Story






