என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆசிரியர் திட்டியதால் 12-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்6 Feb 2022 7:56 AM GMT (Updated: 6 Feb 2022 7:56 AM GMT)
ஒரத்தநாடு அருகே ஆசிரியர் திட்டியதால் 12-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரத்தநாடு:-
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பருதியப்பர் கோவிலை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் வித்யா (வயது17). இவர் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன் மாணவிகள் ஒரு ஆசிரியரின் புகைப்படத்தை எடுத்து கிண்டல் செய்யும் நோக்கில் செல்போன்களில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர்.
இதைப்பார்த்த ஆசிரியர்கள் ஸ்டேட்டஸ் வைத்துள்ள மாணவிகளை அழைத்து கண்டித்துள்ளனர். பள்ளியின் துணை முதல்வர் சசிகுமார், மாணவிகளை பொது தேர்வில் உங்கள் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த மாணவி வித்யா நேற்று இரவு வழக்கம் போல் தனது அறையில் படுக்க சென்றுள்ளார்.
காலை வித்யா நீண்டநேரம் கதவு திறக்காமல் இருப்பதை பார்த்த குடும்பத்தினர் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே பார்த்தபோது வித்யா தூக்கு போட்டுக் கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து வித்தியாவின் சித்தப்பா சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளியின் துணை முதல்வர் சசிகுமாரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X