என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோசடி
வாடகை கார்களை அடகு வைத்து மோசடி
வாடகைக்கு எடுத்த கார்களை அடகு வைத்து மோசடி செய்த தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
சிவகாசி மாரனேரியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). இவருக்கு சொந்தமான காரை செந்தில்குமார் என்பவர் வாடகைக்கு எடுத்துச் சென்றார். ஆனால் 1 மாதமாகியும் காரை அவர் திருப்பி கொடுக்கவில்லை.
மேலும் கார்த்திக்கின் நண்பர் அய்யனார், கருப்பசாமி ஆகியோரது கார்களையும் செந்தில்குமார் வாடகைக்கு எடுத்துள்ளார்.
அந்த கார்களையும் திருப்பித்தராததால் கார்த்திக் உள்பட 3 பேரிடமும் விசாரித்தபோது விருதுநகர் தீயணைப்பு துறை வீரர் திருப்பதியிடம் கார்கள் இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி கேட்டபோது செந்தில்குமார் அந்த கார்களை அடகு வைத்து பணம் பெற்றிருப்பதாக கூறினார். மேலும் கார்களை தரும்படி கேட்டபோது செந்தில்குமார், திருப்பதி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக சிவகாசி கிழக்கு போலீசில் கார்த்திக் புகார் செய்தார்.
புகாரின் பேரில் செந்தில்குமார், திருப்பதி, அவரது தம்பி டேக்கா பாண்டி, தீயணைப்பு வீரர் திருப்பதி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






