என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருநங்கைகளுக்கு அடையாள அட்டையினை மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.
திருநங்கைகளுக்கு அடையாள அட்டை
திருவாரூரில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார்.
திருவாரூர்:
சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக திருநங்கைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் திருநங்கைகளுக்கு மாவட்ட கலெக்டரின் கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்திலுள்ள 22 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் வகையில் முதற்கட்டமாக 5 திருநங்கைகளுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் அடையாள அட்டை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட சமூகநல அலுவலர் கார்த்திகா உடனிருந்தனர்.
Next Story






