என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
போலீஸ் போல் நடித்து தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் பறிப்பு
போலீஸ் போல் நடித்து தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் பறித்த மர்ம நபரை செல்போன் எண்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
பெருந்துறை:
போலீஸ் போல் நடித்து தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் பறித்த மர்ம நபரை செல்போன் எண்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
திருப்பூர் செரீப் காலனி பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 42). இவர் அந்த பகுதியில் ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தொழிலுக்கு அவரது நண்பர் ஆனந்த் என்பவர் பண உதவி செய்து வந்தார்.
இந்த நிலையில் ஆனந்த், பூபதிக்கு போன் செய்து பண பரிவர்த்தனை செய்தால் 20 சதவீதம் அதிக கமிஷன் தருவதாக எனக்கு தெரிந்த கருப்பசாமி என்பவர் கூறு கிறார். எனவே உங்களிடம் பணம் இருந்தால் இந்த பரிவர்த்தனை திட்டத்தில் முதலீடு செய்யுமாறு கூறினார்.
அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். பின்னர் ஆனந்த் தனக்கு தெரிந்த நண்பர் பால கிருஷ்ணன் மூலம் பணம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். இதையடுத்து பூபதிக்காக ஆனந்த் ரூ.10 லட்சம் ஏற்பாடு செய்தார். பண பரிவர்த்தனை மூலம் 20 சதவீத கமிஷன் தருவதாக கூறிய கருப்பசாமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதை யடுத்து அந்த நபர் பூபதி, ஆனந்த் ஆகியோரிடம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதிக்கு பணத்துடன் வருமாறு கூறினார். இதை நம்பி பூபதி, ஆனந்த், பால கிருஷ்ணன் ஆகியோர் திருப்பூரில் இருந்து கார் மூலம் வந்து பணத்துடன் விஜயமங்கலம் பகுதியில் காத்திருந்தனர்.
அப்போது அங்கு அவர் களுக்காக காத்திருந்த கருப்ப சாமி தனக்கு தெரிந்த பண பரிவர்த்தனை செய் வதாக கூறும் நிதின் என் பவருடன் போனில் பேசி னார். இதைதொடர்ந்து கருப் பசாமி கூறியபடி அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் இந்த இடம் சரியில்லை. விஜயமங்கலம்- திங்களூர் ரோட்டுக்கு பணத்துடன் வந்து விடுங்கள். அங்கு நிதின் வந்து விடுவார் என்று கூறினர்.
இதனால் பூபதி, ஆனந்த், பாலகிருஷ்ணன் திங்களூர் பிரிவு அருகே சென்றனர். அப்போது வேறு காரில் இருந்த நிதின் என்று கூறி கொண்ட நபர் அவர்கள் 3 பேரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண் டார்.பின்னர் பூபதி, ஆனந்த், பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்டு வந்த ரூ.10 லட்சத்தை நிதின் பெற்று கொண்டார். பதிலுக்கு நிதின் அவர்களிடம் தன் னிடம் இருந்த வேறொரு பணப்பையை கொடுத்து இதில் ரூ.12 லட்சம் உள்ளது சரி பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி அதை கொடுக்க முயன்றார்.
அப்போது அங்கு திடீரென மற்றொரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து 5 பேர் இறங்கினர். அவர்கள் தாங்கள் போலீஸ் என கூறி பூபதி வைத்திருந்த ரூ.10 லட்சத்தை வாங்கி கொண்டனர். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி நிதின் என்பவரை அழைத்து கொண்டு தப்பி சென்றனர். இதை கண்டு பூபதி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பூபதி பெரு ந்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்ª பக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைதொடர்ந்து போலீ சார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தும் அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்தும் வருகிறார்கள். மேலும் அவர் களின் செல்போன் எண்கள் மற்றும் காரின் பதிவு எண் ஆகியவை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






