என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க-அ.தி.மு.க.
தியாகதுருகம் பேரூராட்சியில் தி.மு.க.-அ.தி.மு.க. நேரடி போட்டி
தியாகதுருகம் பேரூராட்சியில் 7,820 ஆண் வாக்காளர்களும், 8,289 பெண் வாக்காளர்களும், ஒரு 3-ம் பாலினத்தவர் உள்ளிட்ட 16,110 வாக்காளர்கள் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் ஊராட்சி 1953-ம் ஆண்டு, முதல் நிலை பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து 1982- ம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2004- ம் ஆண்டு சிறப்பு சிற்றூராட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு முதல் மீண்டும் தேர்வு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இந்த பேரூராட்சியில் 2011- ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,952 குடும்பங்கள் உள்ளன. இதில் 18,605 பேர் வசித்து வருகின்றனர். நகரின் மொத்த பரப்பளவு 11.69 சதுர கிலோ மீட்டராக உள்ளது.
தியாகதுருகம் பேரூராட்சியில் 7,820 ஆண் வாக்காளர்களும், 8,289 பெண் வாக்காளர்களும், ஒரு 3-ம் பாலினத்தவர் உள்ளிட்ட 16,110 வாக்காளர்கள் உள்ளனர். பேரூராட்சியில் வார்டு எண் 1,4,6,8,10 ஆகியவைகள் பொது பிரிவினருக்கும், வார்டு எண் 2,7 ஆகியவைகள் ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கும், வார்டு எண் 3,9,11,12,13,14 ஆகியவைகள் பெண்கள் பொது பிரிவினருக்கும், வார்டு எண் 5,15 ஆகியவைகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தமுறை பேரூராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை சேர்ந்த விஜயா ராஜி பேரூராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். துணைத் தலைவராக கன்னியம்மாள் கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தியாகதுருகம் பேரூராட்சியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க 20 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே தியாகதுருகம் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றி இருந்தது. தற்போது திமுக ஆளுங்கட்சியாக உள்ளதால் பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க.வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தியாகதுருகம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினர் நேரடி யாக போட்டியிடும் நிலை உள்ளது. மேலும் 2கட்சியினரும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.
தியாகதுருகம் ஊராட்சி 1953-ம் ஆண்டு, முதல் நிலை பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து 1982- ம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2004- ம் ஆண்டு சிறப்பு சிற்றூராட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு முதல் மீண்டும் தேர்வு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இந்த பேரூராட்சியில் 2011- ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,952 குடும்பங்கள் உள்ளன. இதில் 18,605 பேர் வசித்து வருகின்றனர். நகரின் மொத்த பரப்பளவு 11.69 சதுர கிலோ மீட்டராக உள்ளது.
தியாகதுருகம் பேரூராட்சியில் 7,820 ஆண் வாக்காளர்களும், 8,289 பெண் வாக்காளர்களும், ஒரு 3-ம் பாலினத்தவர் உள்ளிட்ட 16,110 வாக்காளர்கள் உள்ளனர். பேரூராட்சியில் வார்டு எண் 1,4,6,8,10 ஆகியவைகள் பொது பிரிவினருக்கும், வார்டு எண் 2,7 ஆகியவைகள் ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கும், வார்டு எண் 3,9,11,12,13,14 ஆகியவைகள் பெண்கள் பொது பிரிவினருக்கும், வார்டு எண் 5,15 ஆகியவைகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தமுறை பேரூராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை சேர்ந்த விஜயா ராஜி பேரூராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். துணைத் தலைவராக கன்னியம்மாள் கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தியாகதுருகம் பேரூராட்சியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க 20 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே தியாகதுருகம் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றி இருந்தது. தற்போது திமுக ஆளுங்கட்சியாக உள்ளதால் பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க.வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தியாகதுருகம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினர் நேரடி யாக போட்டியிடும் நிலை உள்ளது. மேலும் 2கட்சியினரும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.
Next Story






