என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியாண்டி குளத்தில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை.
    X
    அரியாண்டி குளத்தில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை.

    அரியாண்டி குளத்தை தூர்வார வேண்டும்

    வேதாரண்யம் அரியாண்டி குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 108 தீர்த்த குளம், ஏரி, குட்டைகள் உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. 

    பல குளங்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த குளங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு குளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி மழை வெள்ள காலத்தில் மழை நீர் வடிய வாய்க்கால்களை அமைத்து கடலுக்கு நீர் செல்லும்படி வைத்திருந்தனர். 

    நீர் வடியும் வாய்க்கால்கள் பெரும்பாலும் பாதிக்கு மேல் தூர்க்கப்பட்டு தார் சாலைகளாக மாறிவிட்டது.மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வடிய பெரும் சிரமமாக இருக்கிறது.

    இதேபோல் வேதாரண்யம் மையப் பகுதியில் போக்கு வரத்து நெரிசல் உள்ள இடமான மாரியம்மன் கோவில் தெரு ஆரம்பத்தில் அரியாண்டி குளம் என்ற அக்னி தீர்த்த குளம் உள்ளது. 

    இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இந்த குளத்தில் தான் பயன்படுத்தி தீ அணைக்க உதவியது. தற்சமயம் இந்த குளம் வெங்காயத் தாமரை நெய்வேலி காட்டாமணி செடிகள் சூழ்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. 

    மேலும் இந்த குளத்தில் மூட்டை மூட்டையாக கழிவுப் பொருளை கட்டி அந்த குளத்தில் போட்டுவிடுகிறார்கள். இதனால் துர்வாடை வீசுகிறது. 

    இந்த குளத்தின் உடைய துர்நாற்றத்தால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தை தூர்வாரி மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரை செடி கொடிகளை அகற்றி நீரை இறைத்து சுத்தப்படுத்தி கரைகட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×