என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமணமான 8 மாதத்தில் சோகம்- மனைவி இறந்த 4 நாளில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்3 Feb 2022 7:59 AM GMT (Updated: 3 Feb 2022 7:59 AM GMT)
திருமணமான 8 மாதத்தில் கணவன்-மனைவி என இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த காஞ்சி வாயல், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி (வயது26) பெயிண்டர். இவரது மனைவி அபிநயா (22).
இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் திடீரென அபிநயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்ததால் தங்கமணி மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். அவர் யாரிடமும் சரியாக பேசவில்லை. அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள காஞ்சி அம்மன் கோவில் அருகே முட்புதரில் தூக்கில் தொங்கிய நிலையில் தங்க மணி இறந்து கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி இறந்த சோகத்தில் இருந்த தங்கமணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
திருமணமான 8 மாதத்தில் கணவன்-மனைவி என இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
பொன்னேரியை அடுத்த காஞ்சி வாயல், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி (வயது26) பெயிண்டர். இவரது மனைவி அபிநயா (22).
இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் திடீரென அபிநயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்ததால் தங்கமணி மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். அவர் யாரிடமும் சரியாக பேசவில்லை. அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள காஞ்சி அம்மன் கோவில் அருகே முட்புதரில் தூக்கில் தொங்கிய நிலையில் தங்க மணி இறந்து கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி இறந்த சோகத்தில் இருந்த தங்கமணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
திருமணமான 8 மாதத்தில் கணவன்-மனைவி என இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X