search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பெருந்துறை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் கைது

    பெருந்துறை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    அரியலூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவரது மனைவி சகாயச்செல்வி (25). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வினில்குமார் (4) என்ற மகனும், மாளவிகா (1) என்ற மகளும் இருந்தனர்.

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுபுதூர் பகுதியில் ரமேஷ் தனது குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார். ரமேஷ் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சகாயச் செல்வி 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷ் குடும்ப செலவுக்கு சரியாக பணம் தருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் கணவன- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ரமேஷ், சகாயச் செல்வியை திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து ரமேஷ் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். கணவர் திட்டியதால் மன வருத்தத்தில் இருந்த சகாயச்செல்வி தனது குழந்தைகள் வினில்குமார், மாளவிகா ஆயோரை அழைத்து கொண்டு வீட்டு அருகே உள்ள கிணற்று பகுதிக்கு சென்றார்.

    60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தனது 2 குழந்தைகளை வீசி விட்டு சகாயச்செல்வியும் குதித்தார். இதில் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். ஆனால் சகாயச் செல்வி தட்டுதடுமாறி கிணற்றின் படிகட்டுகளை பிடித்து உயிர் தப்பினார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி காயங்களுடன் மயங்கி கிடந்த சகாயச்செல்வியை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் வினில்குமார், மாளவிகா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சகாயச் செல்வியை போலீசார் கைது செய்து கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×