என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் குழாய் பொருத்தும் பணி.
    X
    குடிநீர் குழாய் பொருத்தும் பணி.

    கொள்ளிடம் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

    கொள்ளிடம் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கீழமாத்தூர், எருக்கூர், புத்தூர், கோபாலசமுத்திரம், ஆனைக்காரன் சத்திரம், ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி, அரசு கான்கிரீட் வீடு கட்டும்பணி, குடிநீர் குழாய் அமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் முருகண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் பணியை தரமாகவும் விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார். ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பி.டி.ஓ உமாசங்கர், ஒன்றிய பொறியாளர் தாரா மற்றும் ஊராட்சி தலைவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×