என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிவிழா நடந்தது.
    X
    மணிவிழா நடந்தது.

    ஆதீனம் மணிவிழா

    வேளாக்குறிச்சி ஆதீனம் மணிவிழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    வேதம் நிறைந்த தமிழ்நாட்டின் கண் உள்ள புனிதமான சைவ ஆதீனங்களில் மாநிலத்தின் ஜீவநதி என போற்றப்படும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளதும், 14-ம் நூற்றாண்டில், சிவபுரம் சத்தியஞான தீர்க்கதரிசிகளால் தோற்றுவிக்கப்பட்டதுமான புகழ்மிக்க திருக்கைலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் 18-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் மணி விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், துலாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்புகலூர் ஆதீன இளவரசு ஸ்ரீஅஜபா நடேஸ்வர சுவாமிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×