என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தலைமையில் தொழுநோய் ஒழிப்ப உறுதிமொழி ஏற்பு.
தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி
நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழுநோய் இல்லா இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்ற உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தலைமையில் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் எற்றனர்.
தொடர்ந்து தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2 ஊனமுள்ள தொழு நோயாளிகளுக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், இணை இயக்குநர் நலப்பணிகள் ராணி, துணை இயக்குநர் தொழுநோய் சங்கரி, நிலைய மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






