என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தொடர் கோயில்களில் உண்டியல் கொள்ளை - போலீசுக்கு சவால் விடும் கொள்ளையர்கள்

    திட்டக்குடி அருகே கோயில்களில் உண்டியல் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆ.பாளையம் கிராமத்தில் ராமநத்தம் திட்டக்குடி மாநில சாலை ஓரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது .நேற்று இரவு வழக்கம் போல் அந்த கோயிலில் படைக்கும் பூசாரி மருதமுத்து கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். 

    இன்று காலை வழக்கம் போல் கோயிலுக்கு வந்தபோது கோவில் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உள்புறம் வைத்திருந்த உண்டியல் காணவில்லை. இந்த கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அதிகளவில் காணிக்கை உண்டியலில் செலுத்தியுள்ளனர். 

    கோயில் உண்டியலில் ஒரு லட்சம் ரூபாய் மேல் பணம் மற்றும் நகை இருக்கும் என கூறுகின்றனர். திருடர்கள் கோயில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை தூக்கி சென்றுள்ளனர்.தொடர்ச்சியாக கோயில்களில் கொள்ளையர்கள் கோயில் உண்டியல் கலை தூக்கி சென்று வருகின்றனர். 

    இது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது .தகவலின்பேரில் வந்த ராமநத்தம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கடந்த 3 தினங்களாக ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் கொள்ளையர்கள் கோயில்களை குறிவைத்து கொள்ளையடித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    மேலும் மக்கள் நடமாட்டம் போக்குவரத்து உள்ள பகுதியில் நேற்று இரவு கோவில் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது.
    Next Story
    ×