என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புப்படம்.
கோடியக்கரை சரணாலயத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பறவைகள் வருகை
By
மாலை மலர்31 Jan 2022 9:45 AM GMT (Updated: 31 Jan 2022 9:45 AM GMT)

கோடியக்கரை சரணாலய பகுதியில் 247 வகையான 2 லட்சத்து 87 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள்
சரணாலயம் அமைந்துள்ளது.
இங்கு ரஷ்யா, சைபீரியா, கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும்,
இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும்
ஆண்டு தோறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு ஏராளமான பறவைகள் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் இங்கு
உணவுக்காக வந்து தங்கி செல்வது வழக்கம்.
இந்த ஆண்டும் கடற்காகம், கடல் ஆலா, செங்கால் நாரை, கூழை கிடா, கொக்கு, உள்ளான் வகைகள் உட்பட 247 வகையான பறவைகள்
வந்துள்ளது.
இதனை கணக்கெடுக்கும் பணி ஆண்டு தோறும் நடைபெறும்.
இந்த ஆண்டு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு கணக்கெடுத்து வந்தனர்.
கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சத்தீஷ் கணக்கெடுப்பு விவரங்களை தெரிவித்தார்.
அதன் படி தற்சமயம் 67 வகையான பறவைகள் என மொத்தம்
2 லட்சத்து 87 ஆயிரம் இருப்பதாக அறிவித்தார். அப்போது
கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் உட்பட
வனத்துறையினர் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
