என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ
ஓடும் காரில் தீ
விருதுநகர் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது. காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
விருதுநகர்
சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன் நகரைச்சேர்ந்தவர் நாகராஜ் (வயது 47). இவர் வடமலாபுரத்தைச்சேர்ந்த பெருமாள்சாமியிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று மாரியப்பன் என்பவரை காரில் அழைத்து சென்றார். சோரம்பட்டி பகுதியில் ரெயில்வே பாலம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக காரில் தீ பிடித்தது.
இதனை கண்டதும் நாகராஜ் மற்றும் மாரியப்பன் அவசரமாக கீழே இறங்கிவிட்டனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு ரூ.4Ñ லட்சம் ஆகும்.
சரியான நேரத்தில் காரில் இருந்து இறங்கியதால் நாகராஜ் மற்றும் மாரியப்பன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






