search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் மாநகராட்சி பணியாளர்.
    X
    பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் மாநகராட்சி பணியாளர்.

    நாளை மறுநாள் திறப்பு: பள்ளிகளில் தூய்மை பணி தீவிரம்

    நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க உள்ளதால் பள்ளிகளில் தூய்மைபடுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க உள்ளதால் பள்ளிகளில் தூய்மைபடுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. குறிப்பாக ஜனவரி மாதம் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

    இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தமிழக அரசு இதை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

    அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுபோல் ஞாயிற்றுக் கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படு த்தப்பட்டது.

    மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக முதலில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். 

    ஈரோடு மாவட்டத்திலும் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். இதேபோல் கல்லூரி களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது தினமும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. 

    இதனையடுத்து மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நாளை மறுநாள் முதல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. 

    இதையடுத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளிகளில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 

    பள்ளிவளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படாமல் 100 சதவீதம் முழுமையாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×