என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு: தலைமறைவாக இருக்கும் வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம்

    சூளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
    ஈரோடு:

    சூளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

    ஈரோடு கனிராவுத்தர் குளம் அருகே சூளை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 22-ந் தேதி இரவு பணி முடிந்ததும் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்று விட்டனர். 

    இந்நிலையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு வந்த 2 பேர்  கடையின் முன் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது அங்கு பொருத்தப் பட்டு இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் எரிந்து சேதமடைந்தன.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சிடி.வி கேமிரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில் ஈரோடு லக்கா புரத்தை சேர்ந்த சங்கர் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சம்பவத்தன்று சங்கர், அவருடைய நண்பர் மணி என்கிற கருவா மணி ஆகியோர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு இரவு வந்துள்ளனர்.

    அப்போது டாஸ்மாக் கடையில் பணியாளர் களிடம் மதுவை கேட்டுள்ளனர். அதற்கு பணியாளர்கள் விற்பனை நேரம் முடிந்துவிட்டதால் மது கொடுக்க இயலாது என்று கூறி விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் மற்றும் மணி நள்ளிரவில் அந்த டாஸ்மாக் கடைக்கு வந்து தீ வைத்துள்ளனர்.

    இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    இந்த வழக்கில் தொடர்புடைய மணி என்கிற கருவா மணி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் மீது ஏற்கனவே பல்வேறு  வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×