என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
மீன்- இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்
ஞாயிற்றுக்கிழமையான இன்று முழுஊரடங்கு ரத்து செய்திருப்பதால் ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு:
ஞாயிற்றுக்கிழமையான இன்று முழுஊரடங்கு ரத்து செய்திருப்பதால் ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுபாடுகள் விதித்து வருகிறது. இதே போல் இரவுநேர ஊரங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தியது.
இதனால் கடந்த 3 வாரமாக ஞாயிறுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதே போல் மீன் மற்றும் இறைச்சி கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
இதனால் ஒரு சிலர் சனிக்கிழமைகளிலேயே இறைச்சிகளை வாங்கி சென்றனர். மேலும் பலர் இறைச்சிகள் சாப்பிடாமல் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனால் அரசு பல்வேறு தளர்வுகள் அளித்து வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை தமிழக அரசு ரத்து செய்தது.
இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை முதல் வழக்கம் போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன.
மேலும் இன்று அதிகாலை முதலே ஈரோட்டி மீன் மற்றும் இறைச்சி கடைகள் திறந்திருந்தன. அதிகாலை முதலே பொதுமக்கள் பலர் வந்து அசைவ வகைகளை வாங்கி சென்றனர்.
ஈரோடு ஸ்டோனிபிரிட்ஜ பகுதியில் உள்ள மீன் மார்க்கெட், கருங்கல் பாளையம் மீன் மார்க்கெட், வீரப்பன்சத்திரம், கொல்லம்பாளையம் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் காலை ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான மீன் வகைகளை வாங்கி சென்றனர்.
3 வாரங்களுக்கு பிறகு மீன் கடைகள் திறக்கப்பட்டதால் அதிகளவு மீன் வகைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதே போல் ஈரோடு பஸ்நிலையம் பகுதி, பெருந்துறைரோடு, சென்னிமலை ரோடு, திண்டல், பவானி ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மட்டன், சிக்கன் கடைகளுக்கு இன்று காலை முதலே மக்கள் அதிகளவில் வந்து இறைச்சி வகைகளை வாங்கி சென்றனர்.
மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு வந்த மக்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
முககவசம் அணிய வேண்டும் என்பன உள்பட பாதுகாப்பு வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் அறிவுரை கூறினர்.
மேலும் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள மீன் கடைகளில் இன்று அதிகளவு பொதுமக்கள் வந்து மீன்களை வாங்கி சென்றனர். மேலும் இறைச்சி கடை களிலும் மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது.
இதே போல் கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், கவுந்தப்பாடி, பவானி, சித்தோடு, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, சிவகிரி, எழுமாத்தூர் உள்பட மாவட் டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகளவு வந்து அசைவ வகைகளை வாங்கி சென்றனர்.
Next Story






