என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தர்மபுரியில் லாட்டரி சீட்டுகளை பதுக்கி விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்29 Jan 2022 1:14 PM GMT (Updated: 29 Jan 2022 1:14 PM GMT)
தர்மபுரியில் லாட்டரி சீட்டுகளை பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி பகுதியில் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அவருடைய உத்தரவுப்படி தர்மபுரி டவுன் பகுதியில் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டுகளை பதுக்கி விற்ற பன்னீர்செல்வம் (வயது 63), சேகர்(50) ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 800 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார், கைது செய்தனர். இதில் தொடர்புடைய தமிழ்ச்செல்வன்(45) என்பவரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X