என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர்
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19- ந் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அந்தந்தப் பகுதியில் உள்ள தேர்வு செய்யப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படும். 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறும்.
இதையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல் வக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடை பெறும் அறைகள், வாக்கு பதிவு எந்திரங்களை ஒவ்வொரு அறைக்கும் எடுத்துச் செல்வது, வாக்குச்சாவடி முகவர்கள் வந்து செல்வதுகுறித்தும், தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்று வழங்கும் அறை உள்ளிட் டவைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதேபோல் சங்கராபுரம் மற்றும் வடக்கனந்தல் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் மேலூர் கிராமத்தில் உள்ள டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரி வளாகத்தையும் ஆய்வு செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ லட்சுமி, வருவாய் கோட்டாட் சியர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சம்பத்குமார், உஷா, ஆறுமுகம், நகராட்சி நகர மைப்பு ஆய்வாளர் தாமரைச் செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.






