என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    14 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்து சில்மி‌ஷம் - சித்தப்பா கைது

    காரைக்காலில் 14 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்து சில்மி‌ஷம் செய்த சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் நகர்புறத்தில், ராஜ்குமார்(வயது27) என்பவர் தனது அண்ணன் குடும்பத்தோடு ஒன்றாக வசித்து வருகிறார். ராஜ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜ்குமார் அண்ணனுக்கு 14 வயதுள்ள மகள் உள்ளார். அண்ணன் மற்றும் அண்ணன் மனைவி வேலைக்கு சென்றபிறகு, ராஜ்குமார், சிறுமியின் கைகளை பிடித்து இழுத்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

    இது குறித்து, வேலைவிட்டு வந்தவுடன் சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். தொடர்ந்து, பெற்றோர், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் செய்தனர். அக்குழுவினர் சிறுமியிடம் நடத்திய விசாரனையின் முடிவில், சம்பவம் உண்மை என தெரியவந்ததையடுத்து, அவர்கள், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில், போலீசார் ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் புதுச்சேரி மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
    Next Story
    ×