search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறவைகள்
    X
    பறவைகள்

    கடலோரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு- முதல் நாளில் 55 இனங்களை கண்டறிந்தனர்

    கடலூர் கடலோர பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. முதல் நாளில் 55 இன பறவைகள் கண்டறியப்பட்டது.
    கடலூர்:

    தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் செல்வம் உத்தரவின்பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று கடலூர் கடற்கரை பகுதியில் நடந்தது. இந்த குழுவினர் வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது, வனவர் குணசேகரன், வனக்காப்பாளர் ஆதவன், பறவைகள் ஆர்வலர் சுவாமிநாதன், குழந்தைகள் நல மருத்துவர் இளந்திரையன் மற்றும் தன்னார்வலர் குழு நிறுவனர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் உள்ள பகுதிகளில் பறவைகளை கணக்கெடுத்தனர். அப்போது 55-க்கும் மேற்பட்ட இன பறவைகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதாவது மரங்கொத்தி, சிட்டுக்குருவி, காடை, ஆந்தை, கருங்குருவி, செங்கால்நாரை, வீட்டு பறவைகள், ஆஸ்திரேலியாவில் இருந்து புலம் பெயர்ந்த பறவைகள், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து புலம் பெயர்ந்த குருவிகள், மழைக்கால பறவைகள் உள்ளிட்ட 55 வகையான பறவை இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குழுவினர் இன்று (சனிக்கிழமை) கடலோர பகுதிகளில் மீண்டும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை நடத்துகின்றனர்.
    Next Story
    ×