என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற13 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்- டிரைவர் கைது
Byமாலை மலர்28 Jan 2022 2:01 PM GMT (Updated: 28 Jan 2022 2:01 PM GMT)
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற13 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி அருகே வாகன சோதனை நடத்தினர். நள்ளிரவு 12.30 மணிக்கு அந்த வழியாக வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 264 மூட்டைகளில் தலா 50 கிலோ எடையுடன் மொத்தம் 13.2 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. குந்தாரப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த குப்பச்சிபாறையை சேர்ந்த மூர்த்தி (வயது 35) என்பவரை கைது செய்து ரேஷன் அரிசியுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X