என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவடி மாநகராட்சி
    X
    ஆவடி மாநகராட்சி

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் 3 மாவட்டங்களில் 751 வார்டுகள்

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 751 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.


    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 4-ந் தேதி ஆகும்.

    வேட்பு மனுக்கள் 5-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற 7-ந் தேதி கடைசி நாள். பிப்ரவரி 21-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் இந்த உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணை தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைதலைவர், கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 751 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. 11 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர்கள் இந்த தேர்தல் மூலம் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    Next Story
    ×