என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
பெருந்துறை அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (46). இவர் தனது மனைவி வனிதா மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
மகேஸ்வரன் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.
வழக்கம்போல் காலை வேலைக்கு வந்த மகேஸ்வரன் மதியம் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து இருக்கும் போது மயக்கம் வருவதாக தெரிவித்தார்.
உடனடியாக உடன் பணிபுரியும் மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் மனைவி வனிதாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனைக்கு வந்து வனிதா பார்த்த போது மகேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மசுதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story






