என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்

    விருதுநகர் அருகே தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    விருதுநகர்


    விருதுநகர் அருகே உள்ள காரியாபட்டி யூனியனுக்கு உட்பட்டது மாந்தோப்பு கிராமம். இதன் பஞ்சாயத்து தலைவராக காளீஸ்வரி உள்ளார். 

    இந்த நிலையில் மாந்தோப்பு கிராமத்தில் ஆதிதிராவிடருக்கான குளியல் தொட்டி கட்ட முடிவு காரியாபட்டி யூனியன் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து சம்பவத்தன்று காரியாபட்டி யூனியன் 6-வது வார்டு கவுன்சிலரும், மாந்தோப்பு பஞ்சாயத்து தலைவருமான காளீஸ்வரி கணவருமான முத்துக்குமார், தி.மு.க. பிரமுகர் பால்மயில் (59),  யூனியன் தற்காலிக ஊழியர் ஜெயக்குமார் ஆகியோர் குளியல் தொட்டி கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய சென்றனர்.

    மாந்தோப்பு கிராமத்தில் இடத்தை  பார்த்துக்கொண்டிருந்தபோது காரியாபட்டி யூனியன் அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், சின்னவையம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் ஆகியோர் அங்கு வந்து இங்கு குளியல் தொட்டி கட்டவேண்டாம் என கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது சரவணன், முத்துராமன் ஆகியோர் தன்னை தாக்கியதாக மல்லாங்கிணறு போலீசில் பால்மயில் புகார் செய்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    Next Story
    ×