search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேட்பு மனு தாக்கல்
    X
    வேட்பு மனு தாக்கல்

    விருதுநகர் மாவட்டத்தில் 363 வார்டுகளுக்கு தேர்தல்

    விருதுநகர் மாவட்டத்தில் 363 வார்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது.
    விருதுநகர்


    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ந்தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மனுதாக்கல் நாளை(28ந்தேதி) தொடங்குகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநகராட்சியில் 48 வார்டுகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதில் அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகளும், ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டு களும், சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகளும், விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளும் என 171 வார்டுகள் உள்ளன.

    இதேபோல் மாவட்டத்தில் 9 பேரூராட்சிகள் உள்ளன. இதில் செட்டியார்பட்டி, காரியாபட்டி, மல்லாங் கிணறு, எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்  பட்டி   பேருராட்சிகளில் தலா 15 வார்டுகள் உள்ளன. மம்சாபுரம், சேத்தூர், வத்ராயிருப்பு பேரூராட்சிகளில் தலா 18 வார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள 144 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 

    மொத்தத்தில் மாவட்டத்தில் 363 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. 
    Next Story
    ×