என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்தடை
ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை
துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர், ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேத்தூர் மின் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், சோலை சேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லங்கலம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இதே போல் ஆலங்குளம் மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், ஆலங்குளம் முக்குரோடு, முத்துசாமிபுரம், கங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்பு பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, கொங்கன்குளம், காக்கி வாடான்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, கரிசல்குளம், கொம்பன்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம், மேலாண் மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, கொருக்கலாம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
Next Story






