என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 20 பேருக்கு அபராதம்

    ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு நேர ஊரடங்கை மீறி சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

    அதன்படி இரவு நேர ஊரடங்கை மீறி சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதேபோல் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் போலீசார், வருவாய்த்துறையினர் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணி யாளர்கள் ஒன்றிணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அரசு அறிவித்தது.

    ஈரோடு மாவட் டத்தில் நேற்று முன்தினம் முதல் போலீசார் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 10 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பொது இடங்களில் சமூக இடை வெளியை கடைப்பிடிக்காத 20 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×