என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீனவர்கள் முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டையில் கோரிக்கை எழுதி தபால்பெட்டியில் போட்டனர்.
மீனவர்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
மீனவர்கள் முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டையில் கோரிக்கை எழுதி தபால்பெட்டியில் போட்டனர்.
கவுந்தப்பாடி:
மீனவர்கள் முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டையில் கோரிக்கை எழுதி தபால்பெட்டியில் போட்டனர்.
கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் அனத்தசாகரம் ஏரி 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது மிகவும் பழமையான ஏரி ஆகும். இந்த ஏரி கவுந்தப்பாடி- ஆப்பக்கூடல் மெயின் ரோட்டிலேயே அமைந்துள்ளது.
வருடம் முழுவதும் நீர் நிரம்பிவழியும் இந்த ஏரிக்கு கவுந்தப்பாடி ஓடைப்பள்ளம், சலங்கபாளையம், தடப்பள்ளி கடை மடை பகுதி இதன் நீர் ஆதாரமாக உள்ளது.
ஆண்டு தோறும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மழை காலங்களில் ஏரியில் நீர் நிரம்பிவழியும். கோடைகாலத்தில் சுற்று வட்டார விவசாய பூமியின் நீர் ஆதாரமாக உள்ள கிணறுகள் வற்றாமல் காத்து வருகிறது.
இதன் இன்னொரு சிறப்பு மீன் வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவையான மீனுக்கென்று சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கி செல்கின்றனர். மீனவர்கள் சங்கம் அமைத்து அதன் மூலம் மீனைபிடித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த ஏரியில் மீனவர் சங்கங்கள் மீன் பிடிக்கும் உரிமையை ரத்து செய்ததால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனையடுத்து ஏரி மீனவர் சங்கதலைவர் அய்யம் பெருமாள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் கோரிக்கையை அஞ்சல் அட்டையில் எழுதி முதல்-அமைச்சருக்கு அனுப்பும் போராட்டதை நடத்தினர்.
பின்னர் கோரிக்கை அடங்கிய அஞ்சல் அட்டையுடன் ஏரிக்கரை வழியாக சென்று அங்கு அமைந்துள்ள தபால் பெட்டியில் போட்டனர்.
Next Story






