என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெயிலுக்கு சாமியானா பந்தல் ஏற்றி வந்த மினி வேனில் கஞ்சா கடத்தல்- டிரைவர் கைது
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு ஜெயிலில் நேற்று குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்காக ஜெயிலுக்கு ஒரு மினி வேனில் சாமியானா பந்தல் கொண்டு வரப்பட்டது. அப்போது ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஜெயில் வார்டன்கள் அந்த மினிவேனை சோதனை நடத்தினர்.
அப்போது கைதிகளுக்கு சப்ளை செய்வதற்காக சாமியானா பந்தலில் மறைத்து 137 கிராம் கஞ்சா, செல்போன், ஹான்ஸ் பாக்கெட் மற்றும் சிகரெட் லைட்டர், பீடி பண்டல் மற்றும் செல்போன் சார்ஜர் ஆகியவை மறைத்து வைத்திருந்ததை வார்டன்கள் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து மினி வேன் டிரைவர் பாஸ்கர்(வயது39) என்பவரை காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மினி வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜெயிலில் விசாரணை கைதியாக உள்ள விக்கி என்பவருக்கு கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை சப்ளை செய்ய எடுத்து வந்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மினிவேன் டிரைவர் பாஸ்கரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்