search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    செங்கல்பட்டில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,883 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 757-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

    நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,597- ஆக உயர்ந்துள்ளது. 16,589 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 545 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 85 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 82 ஆயிரத்து 894 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

    இதுவரை 1,283 பேர் உயிரிழந்துள்ளனர். 4,908 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×