என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிழக்கு கடற்கரை சாலையில் காய்கறி கடையில் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்27 Jan 2022 2:44 AM GMT (Updated: 27 Jan 2022 2:44 AM GMT)
லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காய்கறி கடையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 23). இவர் கிழக்கு கடற்கரை சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து அரவிந்த்குமார் கடையை மூடிவிட்டு சென்றார்.
மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2,500 ரொக்க பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்து அவர், லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கடையின் கூரையை 2 வாலிபர்கள் பிரித்து இறங்குவது பதிவாகி இருந்தது. உடனே அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதற்காக கேமரா காட்சிகளை மற்ற போலீசாரிடம் பகிர்ந்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய காவலர் ஒருவர் வாகன சோதனை நடத்தியபோது 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் லாஸ்பேட்டை காய்கறி கடையில் திருடியவர்கள் என்பது தெரியவந்தது. இதுபற்றி தெரிவித்து லாஸ்பேட்டை போலீசாரை வரவழைத்து அவர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கோவிந்தசாலை கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்த சஞ்சய்குமார் (19), ஸ்டிக்கர் மணி (21) என்பது தெரியவந்தது.
இவர்கள் அரவிந்தகுமாரின் காய்கறி கடையில் பணம், செல்போன் சார்ஜரை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கொரோனா பரிசோதனைக்குப்பின் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 23). இவர் கிழக்கு கடற்கரை சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து அரவிந்த்குமார் கடையை மூடிவிட்டு சென்றார்.
மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2,500 ரொக்க பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்து அவர், லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கடையின் கூரையை 2 வாலிபர்கள் பிரித்து இறங்குவது பதிவாகி இருந்தது. உடனே அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதற்காக கேமரா காட்சிகளை மற்ற போலீசாரிடம் பகிர்ந்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய காவலர் ஒருவர் வாகன சோதனை நடத்தியபோது 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் லாஸ்பேட்டை காய்கறி கடையில் திருடியவர்கள் என்பது தெரியவந்தது. இதுபற்றி தெரிவித்து லாஸ்பேட்டை போலீசாரை வரவழைத்து அவர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கோவிந்தசாலை கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்த சஞ்சய்குமார் (19), ஸ்டிக்கர் மணி (21) என்பது தெரியவந்தது.
இவர்கள் அரவிந்தகுமாரின் காய்கறி கடையில் பணம், செல்போன் சார்ஜரை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கொரோனா பரிசோதனைக்குப்பின் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X