என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு: போலீசார் விசாரணை
Byமாலை மலர்26 Jan 2022 10:31 AM GMT (Updated: 26 Jan 2022 10:31 AM GMT)
கடலூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவர் நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக கடலூர் அடுத்த கே.என்.பேட்டையிலும் வீடு உள்ளது. நேற்று முன்தினம் வேல்முருகன் அந்த வீட்டிற்கு வந்தாா். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதை கண்டு பதறிய வேல்முருகன், நகை வைத்திருந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது நகையை காணவில்லை. நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன நகையின் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவர் நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக கடலூர் அடுத்த கே.என்.பேட்டையிலும் வீடு உள்ளது. நேற்று முன்தினம் வேல்முருகன் அந்த வீட்டிற்கு வந்தாா். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதை கண்டு பதறிய வேல்முருகன், நகை வைத்திருந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது நகையை காணவில்லை. நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன நகையின் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X