search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்வர் ஸ்டாலின்
    X
    முதல்வர் ஸ்டாலின்

    தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்: விருது தொகையும் அதிகரிப்பு

    தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது.  அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.

    2021ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்துக்கும், மகாகவி பாரதியார் விருதுபாரதி கிருஷ்ணகுமாருக்கும் வழங்கப்படுகிறது. பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமனுக்கும்,  சொல்லின் செல்வர் விருது சூர்யா சேவியருகும், சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கதுக்கும், தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும்,  அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவிராயருக்கும், 
    சி.பா. ஆதித்தனார்
     திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு. அரசேந்திரனுக்கும், உமறுப்புலவர் விருது நா. மம்மதுக்கும், கி.ஆ.பெ. விருது முனைவர் ம. இராசேந்திரனுக்கும்,  கம்பர் விருது பாரதி பாஸ்கருக்கும், ஜி.யு.போப் விருது ஏ.எஸ். பன்னீர்செல்வத்துக்கும், மறைமலையடிகள் விருது சுகி.சிவத்துக்கும், இளங்கோவடிகள் விருது நெல்லைக் கண்ணனுக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான. அலாய்சியசுக்கும் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.

    இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர்.

    Next Story
    ×