என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிதம்பரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தலைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சசி குமார் (வயது 45). சம்பவத்தன்று சசிகுமார் புவனகிரி அருகே உள்ள திரெளபதி அம்மன் கோவில் தெருவில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே வந்த 2 மர்ம நபர்கள் சசி குமாரிடம் இருந்த 1000 ரூபாயை கொள்ளையடித்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் சசிகுமாரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து சசிகுமார் புவனகிரி போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (20), மேல் புவனகிரியை சேர்ந்த பாலாஜி (20) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 2 வாலிபர்களும் சசிகுமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்