search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ள.
    X
    அரசு பஸ்சின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ள.

    பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் சிக்கினார்

    சாத்தூரில் அரசு பஸ் கண்ணாடியை அரிவாளால் வெட்டி உடைத்த வாலிபர் சிக்கினார்.
    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள நத்தத்துப்பட்டியை  சேர்ந்த தங்கப்பாண்டி   மகன் நாராயணன் ( வயது25). இவர் சாத்தூர் மெயின் ரோட்டில் பழைய அரசு மருத்துவமனை முன்பு கோட்டூரில் இருந்து சாத்தூர் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை நிறுத்தி   அரிவாளால் வெட்டி பஸ் கண்ணாடியை நொறுக்கினார். 

    இதனை  எதிர்பாராத பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர்.  அரிவாள் வைத்திருந்ததால் செய்வதறி யாது டிரைவர் மற்றும் கண்டக்டர் அருகில் உள்ள சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த னர்.

    உடனடியாக  அங்கு சென்ற போலீசார்  அரிவாளுடன்  இருந்த  வாலிபரான நாராயணனை பிடித்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் நாராயணன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 

    பின்னர் போலீசார் நாராயணன் குடும்பத்தினரை வரவழைத்து மனநல மருத்துவமனைக்கு அனுப்ப  அறிவுறுத்தினர்.
    Next Story
    ×