search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள் குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
    X
    கள் குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    நூதன போராட்டம் நடத்திய விவசாயிகள்

    சிங்கம்புணரி அருகே விவசாயிகள் கள் குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி பகுதியில் இயற்கை விவசாயி சிவராமன் தலைமையில் விவசாயிகள் ஒன்றிணைந்து கள் இறக்கும் போராட்டம் நடத்தினர். 

    இதில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் நடைபெறும் கள் இறக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பில் உலகம்பட்டி ஞானியார் மடம் அருகிலுள்ள தென்னை மரத்தில் கள் இறக்கி அதன் தேவையும் அதன் பயன்பாடும் அதன் பொருளாதாரமும் அதன்மூலம் ஈட்டக்கூடிய அண்ணிய செலாவணியையும் எடுத்துக்கூறி விவசாயிகள் கள் இறக்கி அதனை குடித்து போராட்டம் நடத்தினர். 

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×