என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
தொடர் திருட்டு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு:
ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு, வீரப்பன் சத்திரம் சி.என்.சி. கல்லூரி அருகே வசிப்பவர் தமிழ் செல்வன் என்கிற தமிழ் (வயது 28). இவர் மீது பல்வேறு வழிப்பறி, செல்போன் திருட்டு, வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தமிழ்செல்வன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் தமிழ்ச் செல்வன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதற்கான உத்தரவு நகலை போலீசார் கோவையில் உள்ள சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
Next Story






