search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கிராம அலுவலர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    ஸ்ரீபெரும்புதூர் அருகே கிராம அலுவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கடுவஞ்சேரியில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர் கடுவஞ்சேரி அடுத்த தாத்தானூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ராமச்சந்திரன் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை யொட்டி வீட்டை பூட்டி விட்டு தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
    நேற்று இரவு ராமச்சந்திரனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்து ராமசந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரூ. 75ஆயிரம், லேப்-டாப், எல்.இ.டி. டிவி., உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ராமச்சந்திரன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×