search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் இணைப்பு
    X
    மின் இணைப்பு

    விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் முகாம்

    விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் முகாம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2013 மார்ச் 31-ந் தேதி வரை பதிவு செய்த சாதாரண வரிசை விண்ணப்பதாரர்கள் மற்றும் 2013-14-ல் பதிவு செய்த விவசாயிகளுக்கு சுயநிதி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் பணம் செலுத்த முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. 

    சிறப்பு திட்டமாக மேற்கண்ட ஆண்டுகளில் பதிவு செய்த விவசாயிகள் விரைந்து பயன்பெறும் வகையில் தயார் நிலை பதிவு செய்வது (பெயர் மாற்றம், சர்வே எண் மாற்றம், கிணறு போர்வெல் மாற்றம்) தொடர்பான விண்ணப்பங்களை உடனடியாக உரிய மாற்றம் செய்ய சிறப்பு முகாம் விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள மின்வாரிய வளாகத்துக்குள் அமைந்துள்ள விருதுநகர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் வருகிற 24-ந் தேதி காலை 10.30 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று விருதுநகர் மின் பகிர்மான செயற்பொறியாளர் (பொ) பாபு தெரிவித்துள்ளார். 

    Next Story
    ×